புதியதோர் உலகம் செய்வோம்…!

நினைவில் நிற்கும் வரிகள்:

புதியதோர் உலகம் செய்வோம் –
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
(புதிய…)

பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்
                                            
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
                                                  (புதிய…)

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள் தனி எனும் மனிதரைச் சிரிப்போம்

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவது உண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்
(புதிய…)

– 1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த  ‘சந்திரோதயம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

18.02.2021 03 : 55 P.M

You might also like