முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு சலுகை!

தமிழக மின் வாரியம் சார்பில், வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது.

வழக்கமாக கணக்கு எடுக்கப்பட்ட 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தைச் செலுத்தவில்லையெனில், மின் வினியோகம் துண்டிக்கப்படும்.

இதைத் தவிர்க்கும் வகையில் வெளியூர் செல்வோர், வெளியூரில் வசிப்போர் தங்களுக்கான மின் கட்டணத்தை, தோராயமாக ஒரு தொகையை முன்கூட்டியே செலுத்த தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முன்கூட்டியே செலுத்தப்படும் கட்டணத்திற்கு, ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் ஆண்டு வட்டியை, மின் வாரியம் வழங்க உள்ளது.

அந்த வகையில் வரும் நிதியாண்டில் 2.70 சதவீதம் வட்டி வழங்க மின் வாரியத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது அடுத்த மாதத்துடன் முடியும் நடப்பு நிதியாண்டிற்கு, 3.25 சதவீதம் என்றளவில் உள்ளது.

13.02.2021 12 : 30 P.M

You might also like