நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் புரியல்லே!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே
                                                    (யாரை…)

பேரெடுத்து உண்மையைச் சொல்லி
பிழைக்க முடியல்லே
இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்
பேதம் தெரியல்லே
                                                    (யாரை…)

நான் இருக்கும் இடத்தினிலே
அவன் இருக்கின்றான்
அவன் இருக்கும் இடத்தினிலே
நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார்
அதுவும் தெரியல்லே
இப்போ நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்
பேதம் புரியல்லே
அட என்னத்தச் சொல்வேண்டா
தம்பி என்னத்தச் சொல்வேண்டா

தம்பி ஒருவன் வெளியில் நின்று
காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து
கம்பி எண்ணுகிறான்
உண்மை இன்று கூட்டுக்குள்ளே
கலங்கி நிக்குதடா
அட உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு
வெளியில் நிற்குதடா
அட என்னத்தச் சொல்வேண்டா
தம்பி என்னத்தச் சொல்வேண்டா
                                                    (யாரை…)

மூடருக்கும் மனிதர் போல
முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம்
நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும்
உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து
பாடிச் செல்லுமடா
அட என்னத்தச் சொல்வேண்டா
தம்பி என்னத்தச் சொல்வேண்டா
                                                    (யாரை…)

1962-ம் ஆண்டு சிவாஜிகணேசன் நடிப்பில் வெளிவந்த ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

13.02.2021 11 : 50 A.M

You might also like