அறிவை வென்று வா!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
                                 (சென்று வா…) 

அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது
(சென்று வா…) 

உண்மையைச் சொல்வதற்கு படிப்பெதற்கு
எல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு
கண் கண்ட காட்சிகட்கு விளக்கெதற்கு
நெஞ்சில் கள்ளமில்லாதவர்க்கு பயமெதற்கு                                                                                       (சென்று வா…) 

நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
உன் நிழலிலும் பொருளாகக் குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
எந்தச் சபையிலும் உனக்கு நடுக்கமில்லை
                                          (சென்று வா…) 

  • 1966-ம் ஆண்டு சிவாஜிகணேசன் நடிப்பில் வெளிவந்த ‘மகாகவி காளிதாஸ்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

12.02.2021 01 : 32 P.M

You might also like