நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு!

நினைவில் நிற்கும் வரிகள்:

***
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

(ஏமாற்றாதே…)

அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்

(ஏமாற்றாதே…)

பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
இன்றோடு போகட்டும் திருந்தி விடு
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு

(ஏமாற்றாதே…)

நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு
நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்
இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்

(ஏமாற்றாதே…)

  • 1969-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘அடிமைப்பெண்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞா் வாலி.

11.02.2021   02 : 44 P.M

You might also like