எளியோரை தாழ்த்தும் உலகே, உன் செயல் மாறாதா?

நினைவில் நிற்கும் வரிகள்:

***

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா

                                          (எளியோரை…) 

பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வு பறிபோவதோ
அறியாத நங்கை எனதாசை தங்கை
கதி ஏதும் காணாமல் மனம் நோவதோ…

                                          (எளியோரை…) 

சிறகே இல்லாத கிளி போல ஏங்கி
உனைக் காணவே என் உளம் நாடுதே
பறந்தோடி வந்துன் குறை தீர்க்க என்னை
சிறைக்காவல் இங்கே தடை போடுதே…

                                          (எளியோரை…) 

-1958 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் வெளிவந்த ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

01.02.2021   12 : 15 P.M.

You might also like