இனி வாழ்வில் துயர் வரப் பாதை இல்லை!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
                                                            (என்றும்…) 

இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை

கொடும் வாதைக்கும் போதைக்கும் வேலை இல்லை
எங்கள் வாழ்வினில் துயர் வர பாதை இல்லை
                                                           (என்றும்…) 

அன்பு தாயென்னும் கோயிலை நாடி
அலைபாயுது ஆசைகள் கோடி

என்னை வாவென்று தாவிடும் பாசக் குரல்
வந்து வாழ்த்திடும் போற்றிடும் நேசக் குரல்…
                                                          (என்றும்…) 

  • 1961-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘புனர் ஜென்மம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

21.01.2021 12 : 35 P.M

You might also like