மருத்தவ படிப்பில் 7.5% ஒதுக்கீடுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது!

அரசு பள்ளி மாணவர்களைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள்ஒதுக்கீடுக்கு வழங்கக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தற்போது கலந்தாய்வு நடக்கும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி இடைக்கால உத்தரவு மூலம் இடையூறு ஏற்படுத்த முடியாது எனக் கூறி  வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

05.01.2021 12 : 30 P.M

You might also like