தண்ணீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 450-க்கும் மேற்பட்ட குடிநீா் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் பங்கேற்றனா். அப்போது, அவா்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் வழங்கப்பட்டன. குறிப்பாக, ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அழுக்கடைந்த கீறல் […]

கவிதையே தெரியுமா… அந்தக் கவிதை நீதானே…!

’தமிழ்நாட்டில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை விடக் கவிஞர்கள் எண்ணிக்கை அதிகம்’ என்று திரைப்படங்களில், நாடகங்களில், பொதுமேடைகளில் கிண்டலடிக்கிற காலமொன்று உண்டு. அந்த அளவுக்குப் பலர் தங்களுக்குத் தெரிந்த தமிழ்நடையில் ‘கவிதை’ எழுதப் பிரியப்பட்டனர். அவர்களில் பலர் பருவ வயதில் தங்களைத் தொற்றிய ‘பிரியத்தால்’ கவிதை எழுத வந்தவர்கள் தான். நல்லதொரு சுற்றுலா தலத்தைக் காண வந்தவர்களாய் பலரும் கவிதையைக் கண்டுவிட்டுச் சென்றுவிட, மிகச்சிலர் மட்டும் அந்த இடத்தின் நினைவுகளைப் பதிய வைத்துக்கொண்டு கவிதை நிலத்திலேயே தங்கிவிடுகின்றனர். ஏற்கனவே […]

தலைமுறைகளைக் கடந்த பொம்மலாட்டக் கலை!

பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. பொம்மலாட்டம் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது. மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு தான் பொம்மலாட்டம். இந்தக் கலை நாட்டுப்புறங்களில் முக்கிய தொடர்பாடல் கருவியாகவே விளங்கியது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய சினிமாக்களிலும் இந்தக் கலை மிகவும் புத்துணர்வுடன் விளங்கி வருவது சிறப்புக்குரிய விஷயமாகும். சீனா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி போன்ற […]

மகிழ்ச்சி இங்கதான் இருக்கு…!

மார்ச் 20 – சர்வதேச மகிழ்ச்சி தினம் மகிழ்ச்சி என்பது மனித உணர்வுகளில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. எந்நேரமும் இன்பமுற்று இருப்பதைவிட இந்த உலகில் வேறென்ன வரம் இருந்துவிடப் போகிறது. அந்த வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, ‘இன்பம் தருவது எது’ என்று நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு திசை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், ‘இதுதான் மகிழ்ச்சி’ என்று எதையும் நம்மால் வரையறுக்க முடிவதில்லை. மகிழ்ச்சி எங்கே? எது மகிழ்ச்சி? இயல்பைத் தொலைக்காமல், ஒவ்வொரு கணமும் முன்னேற்றத்தின் படிகளில் ஏறியவாறே, வாழ்வின் […]

சுகாதாரமான வாய் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது!

மார்ச் – 20: உலக வாய்வழி சுகாதார தினம்: அழகு என்பது உடல் தோற்றப்பொலிவு சார்ந்து இருப்பதில்லை. அழகுக்கு முக்கியமாக பற்களின் பங்கு என்பது அவசியம் தேவை. ஆரோக்கியமான பற்கள் சுகாதாரமான வாய் இவை இரண்டும் தான் ஒருவர் முகம் அழகாக தெரிய காரணமாக இருக்கிறது. அருகில் வந்து பேசும் போது வாய் துர்நாற்றம் இல்லாமல், பற்கள் சீராகவும் இருந்தால் நம் மீது மதிப்பு மரியாதையும் ஏற்படுத்தும். சீரற்ற பற்களுடன், வாய் துர்நாற்றத்துடன் நாம் பேசும் போது […]

அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன்!

உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்குப் பெற்றவரும், அறிவியல் புரட்சியில் முக்கிய பங்காற்றிய ஒருவராகவும், விஞ்ஞானிகளுக்கு எல்லாம் விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர் சர் ஐசக் நியூட்டன். இங்கிலாந்து நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த நியூட்டன் பள்ளிப் படிப்பை படிப்பதற்கே மிகவும் சிரமப்பட்டார். சிறுவயதில் இருந்தே அறிவியல் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த நியூட்டன், தண்ணீரில் வேலை செய்யும் கடிகாரத்தை அப்போதே கண்டுபிடித்தார். விடாது துரத்திய ஏழ்மையின் காரணமாக 14 வயதிலேயே பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது […]