வாழ்வின் மிக உயரிய பண்பு எளிமைதான்!
இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி, கட்டிடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் மற்றும் சிற்பி போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார். குறிப்பாக, மோனாலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் போன்ற உலக புகழ்பெற்ற ஓவியங்களைப் படைத்தவர். கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் கொண்டவர். மிகச்சிறந்த கற்பனை வளம் உடையவரான டாவின்சி உடற்கூற்றியல் மற்றும் வானியல் துறைகளிலும் பங்களித்துள்ளார். தனது பன்முக ஆற்றலால் பிரபஞ்ச மனிதர் என்று […]
தமிழன் என்றால் யார்?
பெரியாருக்கும், குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே இறை நம்பிக்கை சார்ந்த கருத்து முரண் இருந்தாலும், அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்தது அனைவரும் பாராட்டும் விதத்தில் இருந்தது. இருவருக்குமிடையே இறை நம்பிக்கை தொடர்பாக நாகரீகமான விவாதம் நடைபெற்றுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காண்போம். (குன்றக்குடி அடிகளார் பெரியாருக்கு எழுதிய கடிதம்….) குன்றக்குடி டிசம்பர் 26, 1956 அன்புள்ள பெரியார் அவர்களுக்கு, திருவருள் இன்பம் யாண்டும் மலர்க! தாங்கள் 15.12.1956 இல் மதுரையில் நடந்த திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் அறிவித்திருக்கும் போராட்டச் […]
அமானுஷ்ய விஷயங்களில் ஷேக்ஸ்பியருக்கு இருந்த நம்பிக்கை!
அக்கல்ட் (Occult) என்ற அறிவுக்கு அப்பாற்பட்ட அமானுட விடயங்களில் ஷேக்ஸ்பியருக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.
உன்னதமான உறவு ‘உடன்பிறப்பு’!
நம்முடன் வாழ்நாள் முழுவதும் உடன் பயணிக்கும் ரத்த சொந்தங்களாக தொப்புள்கொடி உறவுகளாக ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதர சகோதரிகள் உள்ளனர். அன்பு செலுத்துவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. எவ்வளவு பிரச்சினைகள் இடையில் இருந்தாலும் நம்மை எங்கும் எவ்விடத்திலும் எவரிடத்தும் விட்டுக்கொடுத்து விடாமல் நம்மைப் பாதுகாப்பதில் கண்ணுங்கருத்துமாக இருப்பதில் வல்லவர்கள் நம்முடன் பிறந்தவர்கள் என்றால் மிகையல்ல. அவர்களுக்காக ஒரு தினமாக இன்று ஏப்ரல் 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை நாம் கொண்டாடக் காரணமானவர் அமெரிக்காவைச் சேர்ந்த […]
மனிதர்களைக் கொல்லும் மன்சினில் மரம்!
பொதுவாக, மரங்கள் என்றாலே உயிரினங்களின் வாழ்விடமாக அமைவது, வெயிலுக்கு நிழல் தருவது, உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை தருவது போன்று பல நன்மை பயக்குபவையாகவே உள்ளன. ஆனால், நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல நன்மை என்று இருந்தால் தீமையும் இருக்கும் என்பதைப் போல விஷத்தன்மை உள்ள ஆபத்தான மரங்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது. அதில் ஒரு வகை தான் உலகிலேயே அதிக விஷத்தன்மை உள்ள மரம் என உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற […]
அன்பும் அரவணைப்பும்தான் ஆட்டிசத்திற்கான அருமருந்து!
உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (WORLD AUTISM AWARENESS DAY) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் பாதித்தவர்களை எப்படிக் கையாள வேண்டும், எப்படி அவர்களை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு தினத்தின் நோக்கம். மன இறுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வளர்ச்சி கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மக்களுக்கு புரியவைப்பதற்கும் இந்த விழிப்புணர்வு தினத்தை பயன்படுத்துகிறார்கள். உலக ஆட்டிசம் தினம், கடந்த 2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்படுத்தப்பட்டது. […]