எழுத்தாளர்களின் ரசனை வரிகள்:
இதோ நான் இப்படித்தான், என் பௌதிக உயரம் உண்டாக்கிய குனிவுடன் எங்கள் வீட்டுக் கல் திண்டில் அமர்ந்திருந்தேன். எனக்குப் பின்னால் அடர்த்தியான இருள் இருந்தது.
ஒரே ஒரு வெளிச்சப் புள்ளி இல்லாத இருள் உண்டா? எப்போதும் போல, என்னைக் காப்பாற்றும் ஒரு தாவரம் இடது பக்கம் அசைந்து உயர்ந்தது.
என்னைக் கைவிடுபவர்கள், ஒரு போதும் என்னைக் கைவிடாது இருக்கிறவர்கள் என்ற தழலின் தாமிர ஒளி என் முகத்தில் விழுந்திருந்த சமயத்தில் எடுத்த சில படங்களில் இதனை எனக்குப் பிடித்திருக்கிறது.
படம் எடுத்தது எம்.எம்.தீனன் என நினைக்கிறேன்.
– எழுத்தாளர் வண்ணதாசன்