வாசிப்பின் ருசி:
பண்டைக்கால வணிகர்களிடம் ஒரு நல்ல வழக்கம் இருந்தது.
கடையைத் திறந்ததும் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியை வைத்து விடுவார்கள்.
முதல் வாடிக்கையாளர் வந்து வாங்கிச் சென்ற பின் நாற்காலியை எடுத்து உள்ளே வைத்து விடுவார்கள்.
அடுத்த வாடிக்கையாளர் வந்தால், கடைக்காரர், கடையைவிட்டு வெளியே வந்து கடைத்தெருவில் எந்தக் கடையின் முன் நாற்காலி இருக்கிறதோ, அந்தக் கடையைக் காட்டி, தன்னுடைய கடைக்கு வந்த அந்த வாடிக்கையாளரை, முதல் விற்பனை நடக்காத அந்தக் கடைக்கு அனுப்பிவிடுவார்கள்.
சக வணிகர் இன்னும் அவரது வியாபாரத்தை துவக்கவில்லை. நான் துவங்கி விட்டேன் என்ற காரணம் தான் இது.
இதனால் தான் அவர்களது வியாபாரங்கள் வளம் கொழிந்து விளங்கின.
– ‘பழந்தமிழர் வாழ்வியல்’ நூலிலிருந்து ஒரு பகுதி.