எம்.ஜி.ஆர். வளர்ந்து திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற சமயத்தில், தனது சகோதரர்களைப் பற்றிக் கூறும்போது, “என்னைப் பெற்ற அன்னை, பெரும் செல்வமாக ஓர் அண்ணனைக் கொடுத்தார். அதேபோல் கலைத்தாயும் எனக்கு இரண்டு அண்ணன்களைக் கொடுத்திருக்கிறார். கலைவாணரும், எம்.கே.ராதாவும்தான் அவர்கள்.
இவர்கள் மூவருமே இணைந்த கலவையாக என்னை உருவாக்கி, எனக்கு வழிகாட்டியாக, எனது ஈடு இணையற்ற தலைவராக எல்லாமுமாக விளங்கிய ஓர் அண்ணனை அறிஞர் அண்ணாவாக அரசியல் எனக்குத் தந்தது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
நன்றி: ஜான அழகர் முகநூல் பதிவு