அதிமுகவும் பங்கேற்க திருமா அழைப்பு!

செய்தி:

கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்த அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

கோவிந்த் கமெண்ட்:

ஏற்கனவே பழனியில் நடந்த முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விமர்சித்திருந்தது. இப்போது மது ஒழிப்பு மாநாட்டை அறிவித்திருக்கிறது வி.சி.க.

அதோடு விடாமல் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக மத ஒழிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததையும் பொறுப்புடன் நினைவூட்டி இருக்கிறது.

இப்போது அதிமுகவையும் மாநாட்டுக்கு அழைத்திருப்பது கூடுதல் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

அதெல்லாம் சரி, மதுபானத் தயாரிப்பில் தொடர்புடையவர்கள் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்ந்தவர்களாக இருந்து கொண்டிருக்கும்போது அவர்களை அழைப்பது வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம்.

ஆனால், மதுவை ஒழிப்பதிலும் அதற்கு ஆதாரமான மதுபான ஆலைகளை மூடுவதிலும் அவர்கள் அக்கறை காட்டுவார்களா என்பதுதான் கேள்வி.

You might also like