யார் ஒட்டுண்ணி?

படித்தவற்றிலிருந்து:

தமிழ்நாட்டில் ஒரே ஒரு இடமாவது கிடைத்துவிடாதா என்ற நப்பாசையில் பா.ம.க.வை, ஓ.பன்னீர்செல்வத்தை, தினகரனை, ஏ.சி.சண்முகத்தை, ஜான் பாண்டியனை உறிஞ்சிக் கொழுக்கப் பார்த்தார்களே? என்ன நடந்தது?

பா.ஜ.க. நிறுத்திய வேட்பாளர்களில் 116 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள். அதாவது நான்கில் ஒருவர் வேறு கட்சியில் இருந்து வந்தவர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த 37 பேருக்கு இடம் கொடுத்துள்ளார்கள். இவர்களில் எத்தனை பேர் வென்றார்கள் என்பது இருக்கட்டும். இவர்களை பா.ஜ.க.வுக்குள் இணைத்து உறிஞ்சப் பார்த்தது யார்?

பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை, தலைவர்களை வருமான வரித்துறை மூலமாகவும், அமலாக்கத்துறை மூலமாகவும் மிரட்டியதற்கு என்ன பெயர் வைக்கலாம்? அதனையும் பிரதமரே சொல்லட்டும்.

அவருக்குத் தான் நன்றாக பெயர் வைக்கத் தெரிகிறது. இந்தியாவுக்கு சோறு வைக்கத் தான் அவருக்குத் தெரியாதே தவிர. பேரு வைப்பார்!

நன்றி : முரசொலி

You might also like