தற்போது உண்மையை உடைத்துப் பேசியுள்ளேன்!

– ஜெயலலிதா குறித்த சர்ச்சைக்கு திருநாவுக்கரசர் விளக்கம்

ஜெயக்குமாார், செல்லூர் ராஜு போன்றவர்கள் உங்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்களே?

நான் ஜெயலலிதாவை காப்பாற்றியதால்தான் அவர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். முதல்வரானார்.

நான் காப்பற்றியதால்தானே இவர்கள் எல்லாம் அமைச்சர்களாகி சாப்பிட்டு சவுகரியமாக இருக்கின்றனர்.

இவர்கள் என்னை துரோகி என்பதுதான் காமெடியாக இருக்கிறது. நான் தற்போது அதிமுககாரன் கிடையாது. திமுக கூட்டணியில் உள்ளேன்.

எனவே திமுககாரன் மாதிரிதான் பேச முடியும். அன்றைய கூழலில் அதிமுகவிற்காக பொய்யாக பேச வேண்டியநிலை. தற்போது உண்மையை உடைத்துப் பேசியுள்ளேன்.

– இந்து தமிழ் திசை நாளிதழ் பேட்டியிலிருந்து ஒரு பகுதி

  • நன்றி: இந்து தமிழ் திசை
You might also like