முக்கியமானவற்றைக் கற்பதே அறிவின் ரகசியம்!

பல்சுவை முத்து: 

இளமையாகவிருக்கும் போதே 
முடிவெடுக்க வேண்டும்;
கடந்த பாதையைப் பார்க்காதே,
முன்னால் உள்ளதை உற்றுக் கவனி;

நமக்கு அளவற்ற சக்தி வேண்டும்;
அளப்பரிய ஆர்வம் வேண்டும்;
அதிக அளவு துணிவு வேண்டும்;
கூறவியலாத பொறுமை வேண்டும்;
அப்போதுதான் உன்னதமான
செயல்களைச் சாதிக்க முடியும்;

புத்தகங்கள் அதிகம் உள்ளன;
ஆனால் நேரமோ குறைவு;
முக்கியமானவற்றைக் கற்பதுதான்
அறிவின் இரகசியம்;
அதனை பின்பற்றுங்கள்!

  • விவேகானந்தர்
You might also like