உழைக்கும் வர்க்கம் உயரட்டும்!

பல்சுவை முத்து :

உலக மெலாம் பருவ மழை
ஒத்தபடி பெய்யட்டும்;

உழவரெலாம் தானியத்தை
உவப்புடனே பெருக்கட்டும்;

பலதொழில்கள் புரிகின்ற
பாட்டாளி உயரட்டும்;

பகுத்துணர்வில் தொகுத்துணர்வு
பண்பாட்டை உயர்த்தட்டும்;

கலகங்கள் போட்டி, பகை
கடந்தாட்சி நடக்கட்டும்;

கல்லாமை, கடன், வறுமை,
களங்கள் மறையட்டும்;

நலவாழ்வை அளிக்கும்
மெய்ஞான ஒளி வீசட்டும்;

நம் கடமை அறவாழ்வின்
நாட்டத்தே சிறக்கட்டும்!

– வேதாத்திரி மகரிஷி

You might also like