பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஜானகி எம்.ஜி.ஆர்!

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களின், முன்னாள் அரசியல் தலைவர்களின் அவரது மரணம் மற்றும் பிறந்தநாள் விழாக்கள், பதாகைகள், சுவரொட்டிகள், இலவச உணவு மற்றும் நினைவேந்தல் கூட்டங்கள் என்று எப்போதும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மாநில முதல்வராக பதவியேற்ற முதல் பெண் ஜானகி ராமச்சந்திரன் அல்லது வி.என்.ஜானகி மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

1924ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி, கேரளாவின் வைக்கம் நகரில் பிறந்த வைக்கம் நாராயணி ஜானகி கலைகள் சூழ வளர்ந்தார்.

இவரது பெரியப்பா பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாபநாசம் சிவன். 1936 ஆம் ஆண்டில், அவரது தந்தை, இசையமைப்பாளர் ராஜகோபால் ஐயர், மெட்ராஸ் மெயில் திரைப்படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். அவர்கள் அப்போது மெட்ராஸுக்கு குடிபெயர்ந்தனர்.

ஜானகி இசை மற்றும் பாரம்பரிய நடனம் ஆகிய இரண்டிலும் பயிற்சி பெற்றவர். மேலும் பல படங்களில் நடித்தார். அவற்றில் பல படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார்.

எம்.ஜி.ஆர் – ஜானகி திருமணத்திற்கு பிறகு, ஜானகி சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்தார். 1987ல் எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, எம்.ஜி.ஆரின் ஆதரவாளரான ஜெ.ஜெயலலிதாவை எதிர்த்துப் போராடி, மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக ஆனார். அந்த 24 நாட்களில் தமிழகத்தில் கல்வித் தந்தைகள் பலர் உருவானார்கள்.

அதாவது 1972 ஆம் ஆண்டு அ.தி.மு.க கட்சி ஆரம்பித்து, அடுத்த தேர்தலில் 1977 லேயே ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர், இறக்கும் வரை முதல்வராகவே இருந்தவர்.

பத்தாண்டு காலம் ஆட்சி செய்த அவர் மரணம் அடைந்த பின் அவர் மனைவி வி.என். ஜானகி இராமச்சந்திரன் முதல்வர் ஆனார்.

அப்போதே கட்சியில் தனியிடம் பெற்றிருந்த ஜெயலலிதா அவர்கள் தன் செல்வாக்கை பயன்படுத்த, கட்சி இரண்டாக உடைந்தது.

ஜா அணி, ஜெ அணி என்று இரண்டாக பிரிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி இராமச்சந்திரன் தோற்றுப் போனார்.

தமிழக சரித்திரத்தில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெயரைப் பொறித்தவர், 24 நாட்களுக்குள் (7-1-1988 முதல் 30 -1-1988 வரை) முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார்.

அதன் பின், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதும், பின் வந்த தேர்தலில் கலைஞர் கருணாநிதி முதல்வர் ஆனதும் தனிக்கதை.

ஜானகி இராமச்சந்திரன் கணவனின் நிழலில் வாழ்ந்தவர். அரசியலின் தந்திரங்களை அறியாதவர்.

கணவர் மறைந்த துயரில் இருந்து வெளி வர இயலாமல் மேடைகளில் அவர் கண்ணீர் பெருக்கிட, ‘கண்ணீர் அரசியல்’ என்று மற்றவர் பகடி செய்ததும் அவரை மேலும் வலுவிழக்கச் செய்தது.

ஆனால், கணவர் வழி நின்று, வள்ளல் தன்மையுடன் எம்.ஜி.ஆர் அவர்களின் இறுதி உயில்படி சொத்துக்களை தர்ம காரியங்களுக்கு அள்ளித் தந்தார்.

சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள சொத்தினை, அ.தி.மு.க கட்சி அலுவலகமாக்க தந்தார்.

கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை ஏழைக் குழந்தைகளும், ஊனமுற்றோரும் பயன் பெறும்படி தானமாக தந்தவர்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய காது கேளாதோர் பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக்காலத்தை கழித்த ஜானகி அம்மையார், 1996 ஆம் ஆண்டு இதே மே 19இல் தனது 73-வது வயதில் மறைந்தார்.

You might also like