பா.ஜ.க யாரையும் மதிப்பதில்லை!

ராகுல்காந்தி குற்றச்சாட்டு

சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள மேகாலயாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்தார்.

சில்லாங்கில் நடந்த பிரசாரச் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக விமர்சித்தார்.

கூட்டத்தில் பேசிய அவர், “பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் எல்லாம் தங்களுக்கு தெரியும் என்று நினைக்கும் வர்க்கக் கொடுமைக்காரனைப் போன்றவை. தாங்கள் அனைத்தையும் புரிந்து வைத்திருப்பதாக நினைக்கிறார்கள். யாரையும் மதிப்பதும் இல்லை.

அவர்களுக்கு எதிராக நாம் இணைந்து போராட வேண்டும். மேகாலயாவின் மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்றை பா.ஜனதா அழிக்கப் பார்க்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி அதை அனுமதிக்காது.

நான் உங்களுடைய பாரம்பரிய ஜாக்கெட்டை அணிந்திருக்கிறேன். உங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் இதை அணிந்துள்ளேன். எனது செயல்கள் இந்த ஜாக்கெட்டில் பிரதிபலிக்கின்றன.

ஆனால், பிரதமர் வருவதைப் போல நான் இங்கு வந்திருந்தால், இந்த ஜாக்கெட்டை அணிந்து கொண்டு, உங்கள் மதம், கலாசாரம், வரலாறு மற்றும் மொழியைத் தாக்கினால் நான் உங்களை அவமதித்ததாகவே இருக்கும்” எனக் கூறினார். 

You might also like