பாஜக அரசு ஏழைகளின் நலனில் அக்கறை காட்டுவதில்லை!

– ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தேசம் முழுவதும் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3, 500 கிலோ மீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது உத்தரப் பிரதேசத்தைச் சென்றடைந்துள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பேசிய ராகுல் காந்தி, ”பாஜகவினர் எனது ஆடை பற்றிய (டீ -ஷர்ட்) சர்ச்சைகளை பரப்பி வருகின்றனர்.

ஆனால் இந்தியாவில் குளிர்காலத்தில் ஏழைக் குழந்தைகளும், விவசாயிகளும், கூலி தொழிலாளிகளும் போர்வைகூட இல்லாமல், கிழிந்த ஆடையுடன் அல்லல் அடைந்து வருகின்றனர். அதைப்பற்றி எல்லாம் மோடி அரசு சிந்திப்பதில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை” என குற்றம் சாட்டினார்.

You might also like