மருந்தாகும் சொற்கள்…!

தினம் ஒரு புத்தக மொழி :

புத்தகம் என்பது வெறும் அச்சிடப்பட்ட காகிதங்களின் தொகுப்பில்லை.
அது சிலரை இறக்கையில்லாமல் பறக்க வைக்கிறது.
சிலருக்கு வரைபடம் போல வழிகாட்டுகிறது.
சிலருக்கு கலங்கரை விளக்கு போல நம்பிக்கை அளிக்கிறது
சொற்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன.
சொற்கள் மருந்தாகின்றன.
சொற்கள் விதையாகின்றன.
ஒரு சொல்லின் வயதை நாம் கண்டறிய முடியாது
வாசிக்கும் ஒவ்வொருவரும்
புத்தகத்தை உருமாற்றவே செய்கிறார்கள்

அது ஒரு மேஜீக்
அந்தச் சந்தோஷமே
ஒருவரை மீண்டும் மீண்டும் படிக்க வைக்கிறது.

– எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

You might also like