எம்ஜிஆர் சிலை சேதம்: தொண்டர்கள் கண்டனம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜடையனூர் கிராமத்தில் கூட்ரோடு பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலையின் கையை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இதைக்கண்டு அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.கவினர் அதிர்ச்சி அடைந்தனர். எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி அ.தி.மு.கவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்குள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

You might also like