நேபாளத்தின் புதிய பிரதமராகிறார் பிரசந்தா!

275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமாகவும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், நேபாளத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்தது. முதல் இரண்டரை ஆண்டுகள் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் பிரதமர் பதவியில் இருக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசந்தா அந்நாட்டு குடியரசுத் தலைவரைச் சந்தித்து பிரதமருக்கான உரிமைக் கோரினார். அப்போது தனக்கு ஆதரவளிக்கும் 169 எம்.பி.க்களின் பட்டியலையும் அளித்தார்.

இந்நிலையில், நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் பித்யாதேவி பண்டாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து புஷ்ப கமல் தஹார் விரைவில் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

You might also like