“அம்பேத்கரை அவமதித்தால்…”: திருமா எச்சரிக்கை!

அய்யன் திருவள்ளுவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரைத் தொடர்ந்து தற்போது புரட்சியாளர் அம்பேத்கருக்கு காவிசாயம் பூசிய சங்பரிவார் கும்பலைக் கண்டித்தும், அவர்களை கைது செய்யக்கோரியும்,  தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கொட்டும் மழையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,  சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சங்பரிவார் கும்பலைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன்,  புரட்சியாளர் அம்பேத்கர் கூடுதலாக 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றியிருப்பார் என தெரிவித்தார்.

புரட்சியாளர் அம்பேத்கரை கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாதை, செயல்பாடுகள் வேறாக இருக்கும் என்று சங்பரிவார் கும்பலுக்கு முனைவர் தொல். திருமாவளவன் எச்சரிக்கை விடுத்தார்.

You might also like