எழுத்தாளர் இமையத்திற்கு குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது!

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் ஆசிரியருமான‌ இமையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல், சிறுகதை, கட்டுரைகளை எழுதி வருகிறார்.

தனது முதல் நாவலான‌ ‘கோவேறு கழுதைகள்’ மூலம் தமிழ் இலக்கியத் தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார்.

இமையத்தின் செடல், செல்லாத பணம், சாவு சோறு, பெத்தவன் உள்ளிட்ட படைப்புகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற‌து.

ஆங்கிலம் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.

‘செல்லாத பணம்’ நாவலுக்காக 2020-ம் ஆண்டு சாகித்திய அகாட‌மி விருது இமையத்துக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகாவில் கன்னட தேசிய கவி குவெம்பு பெயரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் ‘குவெம்பு தேசிய விருது’ இந்த ஆண்டு எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like