என்.எல்.சி நியமனத்தில் ஏன் தமிழர் இல்லை?

செய்தி: நெய்வேலி என்.எல்.சி-யில் 299 பொறியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டதில் அனைவரும் வட மாநிலத்தவர்கள். ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது” – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வருத்தம்.

கோவிந்து கேள்வி: கல்லணையை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமளவுக்குத் திறமை கொண்ட தமிழ்நாட்டில் தற்போது நெய்வேலியில் நியமிக்க மட்டும் ஒரு தமிழ்ப் பொறியாளர் கிடைக்கவில்லையா?

தமிழ்நாட்டுக்கு வரும் போது திருக்குறளையும், தமிழ்மொழிப் பெருமையும் பேசுகிறவர்கள் தமிழர் நியமனம் விஷயத்தில் ஏன் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள்? குறைந்தபட்ச ஒதுக்கீடு கூட ஏன் தமிழர்க்கு இல்லை?

You might also like