பாடல்: உள்ளத்தில் நல்ல உள்ளம்

நினைவில் நிற்கும் வரிகள்:

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா – கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா…

(உள்ளத்தில்)

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா

(உள்ளத்தில்)

மன்னவர் பனி ஏற்கும்
கண்ணனும் பனி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா

(உள்ளத்தில்)

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா…

(உள்ளத்தில்)

-1964-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளிவந்த ‘கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்., இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி, குரல்: சீர்காழி கோவிந்தராஜன்.

You might also like