நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

அதில், “ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம்,

திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி” ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

இதேபோல், “இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய்,

உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட்” ஆகிய வார்த்தைகளும் தடை செய்யப்பட்டு இந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

இவற்றைப் பயன்படுத்தினால் சபைத் தலைவர்கள், சபை குறிப்பிலிருந்து நீக்கி விடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like