ஒற்றைத் தலைமை தேவையில்லை! – ஓ.பி.எஸ்!

அ.தி.மு.க. செயற்குழு – பொதுக்குழு கூட்டம், வரும் 23-ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்கிறது.

இதையொட்டி நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத் தலைமை முழக்கம் ஒலித்தது. இது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை மன வருத்தத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து அவர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார். இதனால் அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று ஓ.பன்னீர் செல்வம் நேற்று பேட்டியளித்தது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோருடன் ஆலோசித்து வருகிறார். ஒற்றைத் தலைமை பிரச்சினை முடியாத நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

You might also like