ஒவ்வொருவர் மனதிலும் ஓராயிரம் எண்ணங்கள்!

நினைவில் நிற்கும் வரிகள்:

******

ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

(ஒருவன்)

ஏறும் போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்

வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான்

(ஒருவன்)

தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னல சேற்றில் விழுகின்றான்
பேய்போல் பணத்தை காக்கின்றான்
பெரியவர் தம்மை பழிக்கின்றான்

(ஒருவன்)

-1963-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த  ‘தர்மம் தலை காக்கும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

இசை: கே.வி.மகாதேவன், பாடியவர்: டி.எம்.சௌந்தராஜன். 

You might also like