பயனுள்ள வாழ்வை பெற வேண்டும்!

நாடிய பொருள் கைகூடும்
ஞானமும் புகழும் சேரும் – உன்
ஆலயம் தேடிவந்து
அன்புடன் வேண்டுவோர்க்கே

நாயகியே வருக! வருக! வருக!
வருக! வருக! வருக! வருக!
நாயகியே வருக! – இங்கே
நன்மையெல்லாம் தருக! வருக!
நாயகியே வருக!

பாவங்கள் யாவும் தூளாக வேண்டும்
பயனுள்ள வாழ்வை நான் பெற வேண்டும்
பேரின்ப உலகம் நீ தந்த இதயம்
பேதம் கெடாமல் நான் காக்க வேண்டும்

(நாயகியே)

பூமாலையோடு பாமாலை சூடி
புனிதங்கள் சேரும் பதிகங்கள் கோடி
பால் வண்ண முகத்தில் தேன் முல்லை சிரிப்பில்
பார்க்கின்ற கோலம் நாள்தோறும் வேண்டும்!
(நாயகியே)

ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும்
அனைத்திலும் நீயே துணையாக வேண்டும்
ஆறுதல் வழங்கும் பேரெழில் துலங்கும்
ஆனந்த கீதம் நீ பாட வேண்டும்

(நாயகியே)

– 1981- ம் ஆண்டு விஜயன் நடிப்பில் வெளிவந்த ‘வாடகை வீடு’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் ஆலங்குடி சோமு. இசை: சங்கர் கணேஷ், குரல்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

You might also like