உலகத்த புரிஞ்சு நடந்துக்க…!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா – எம்
மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன்
வந்தது வரட்டும் போடா – சில

(மனுசனை…)

உள்ளதைச் சொன்னா
ஒதைத்தான் கெடைக்கும்

ஒலகம் இதுதாண்டா – ராஜா
ஒலகம் இதுதாண்டா
உள்ளத் துணிவோட
பொய் சொல்லுவோர்க்கு

உல்லாச புரிதாண்டா – இது
உல்லாச புரிதாண்டா…

(மனுசனை…)

வசதியிருக்கிறவன் தரமாட்டான் – அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்

(வசதி…)

எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒழச்சு சோறும் போடுறான்
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுகிறான்
இவன் சோறு போடுகிறான்
அவன் கூறு போடுறான்.

(மனுசனை…)

– 1959-ம் ஆண்டு வெளிவந்த ‘கண் திறந்தது‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

You might also like