நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி…!

 நினைவில் நிற்கும் வரிகள்:

கடவுள் ஏன் கல்லானான்
மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

கொடுமையை
கண்டவன் கண்ணை
இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன்
சொல்லை இழந்தான் 

இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை
இழந்தான்

இங்கு
எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை
இழந்தான் 

(கடவுள்) 

நெஞ்சுக்கு
தேவை மனசாட்சி
அது நீதி தேவனின்
அரசாட்சி 

அத்தனை உண்மைக்கும்
அவன்
சாட்சி 
மக்கள் அரங்கத்தில்
வராது அவன் சாட்சி

(கடவுள்) 

சதி செயல்
செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக் கொண்டிருந்தவன்
குற்றவாளி (2)

உண்மையை
சொல்பவன் சதிகாரன் 
இது உலகத்தில்
ஆண்டவன் அதிகாரம்

(கடவுள்) 

 1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘என் அண்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

You might also like