இந்த ஜென்மத்தில் நான் யார்?

“முற்பிறவியில் நாங்கள் யார், எப்படி இருந்தோம் என்பதெல்லாம் ஏன் தெரியவில்லை?” என்று சிலர் கேட்கிறார்கள்.

போன ஜென்ம வரலாறு இருக்கட்டும். இந்த ஜென்மத்தில் “நான் யார்?” என்று தெரிந்து கொண்டாலே போதும்.

கடவுள் நம்மீதுள்ள கருணையினாலேயே முன் ஜென்ம விவரங்களை மறைத்து வைத்திருக்கிறார். முன் ஜென்மத்தில் தான் ஒரு புண்ணியவானாக இருந்தோம் என்று தெரிந்தால், அவன் இப்போது கர்வம் அடைவான்.

பாவி என்று தெரிந்தால், “ஐயோ! எப்படிக் கடைத்தேறுவேன்” என்று ஏக்கம் அடைந்து, உயர்வதற்கான முயற்சியை செய்யாமலே இருந்து விடுவான். ஆகையால், போன ஜென்ம விவரமெல்லாம் தெரியாமல் இருப்பதே நல்லது.

25.02.2021  2 : 30 P.M

You might also like