கனல் தெறிக்கும் வசனத்திற்கு விருது!

‘பராசக்தி’ 1952-ல் மகத்தான வெற்றி பெற்ற படம். (பண வசூலில் தான்!)

பராசக்தியின் மகத்தான வெற்றிக்கு அதன் வசனம் ஒரு காரணமாயிருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் உள்ள குறைபடுகளைக் கவனிக்க வொட்டாமற் செய்து படத்திற்கு ஜீவநாடியாக விளங்கியது அதன் கனல் தெறிக்கும் வசனம்.

அத்தனைக்கும் காரணமான இளைஞர் மு.கருணாநிதி சென்ற வருஷத்திய சிறந்த வசனகர்த்தா ஸ்தானத்தைப் போட்டியின்றி அடைகிறார்.

– 1953 ஆம் ஆண்டு வெளிவந்த பேசும்படம் மலரிலிருந்து..

08.02.2021 03 : 12 P.M

You might also like