தைப்பூச விழாவும் ஜோதி தரிசனமும்!

சத்திய ஞான சபையை நிறுவிய வள்ளலார் ஜோதி வடிவாக மறைந்ததாகச் சொல்லப்படும் வடலூரில், ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி 150-வது தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது.

ஞான சபையில் உள்ள நிலைக் கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகள் உள்ளன. அந்தத் திரைகள் ஒவ்வொன்றாக விலக்கி நிலைக் கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியைக் காண்பதே ஜோதி தரிசனமாகும்.

அதன்படி காலை 6 மணிக்கு நடந்த முதல் ஜோதி தரிசனத்தை காண, சத்திய ஞானசபையின் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

பின்னர் நிலைக் கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது. அப்போது நிலைக் கண்ணாடிக்கு பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது.

இதை பார்த்த அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அருட்பெருஞ் ஜோதி, அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி’ என்ற மந்திரத்தை உச்சரித்து ஜோதியை தரிசனம் செய்தனர்.

கொரோனா ஊரடங்கு விதிமுறையின் காரணமாக அன்னாதானம் வழங்கவும் கடைகள் மற்றும் ராட்டினம் அமைக்கவும் அனுமதி இல்லை. எனவே பக்தர்களின் வருகை என்பது குறைவாகவே காணப்பட்டது.

தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

இதேபோல் தைப்பூசத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தாிசனம் செய்து வருகின்றனா்.

28.01.2021 12 : 22 P.M

You might also like