காலம் வகுத்த கணக்கை யார் அறிவார்?

நினைவில் நிற்கும் வரிகள்:

***

ஆசையே அலைபோலே..
நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே!

                                               (ஆசை…)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை
இன்றே யார் காணுவார்?
                                               (ஆசை…)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை
இங்கே யார் காணுவார்?
                                                 (ஆசை…)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை
இங்கே யார் காணுவார்?
                                                           (ஆசை…)

1958-ம் ஆண்டு வெளிவந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

#thaipiranthalvazhipirakkum #kannadhasan #asaiyealaipolesonglyrics #தைபிறந்தால்வழிபிறக்கும்’  #கண்ணதாசன் #ஆசையேஅலைபோலபாடல்வரிகள்

You might also like