இயற்கையின் அடிப்படையே இடமிருந்து வலம்தான்!

பூங்காவில் கடிகாரச் சுற்றுத் திசையில் அதாவது வலஞ்சுழியாக நடைப்பயிற்சி செய்பவர்கள்தான் அதிகம். (நடைபயிற்சி நாயகர்களில் பெரும்பான்மையோர் வலஞ்சுழிக்காரர்கள்தான்) அந்தநேரம் இடஞ்சுழியாக அதாவது எதிர்ச்சுற்று சுற்றி வருபவர்களைப் பார்த்தால் கடுப்பாக இருக்கும். ‘எல்லோருக்கும் ஒருவழி என்றால் இடும்பனுக்குத் தனிவழி’ என்ற பழமொழி கூட அந்த மைனாரிட்டி மக்களைப் பார்க்கும் போது நினைவுக்கு வரும். ஆனால், இடஞ்சுழியாக நடைபயிற்சி செய்வதுதான் சரியாம். ஒலிம்பிக் ஓட்டப்போட்டிகளில் பார்த்திருப்பீர்கள். அங்கே ஓவல் என்ற நீள்வட்ட வடிவ ஓடுபாதையில் ஓடும் வீரர்கள், கடிகார சுற்றுக்கு […]

மருதாணி ஏன் சிவக்கிறது?

இரவில் மருதாணி இலையை அரைத்து கையில் பூசிக் கொண்டு மறுநாள் காலையில் கழுவும் போதுகை சிவப்புநிறமாகி விடுகிறது.

ஓவியக் கோடுகளால் மகளிர் தின வாழ்த்துகள்!

ஓவியமாக வரையப்பட்டவர்களுக்கும், இன்னும் நான் ஓவியமாகத் தீட்டாத; சமூகத்தின் உயர்வுக்கு ஓடாய் உழைத்துக் களைத்த; கரைந்த; இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் கலை, இலக்கிய, அரசியல், பல்வேறுபட்ட வேலைகள், குடும்பம் எனத் தன்னலம் பாராது உழைக்கும் மனித குலத்தின் முதல் படைப்பாளியான, பல்லாயிரக்கணக்கான மகளிருக்கும் நெஞ்சார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகள். நன்றி: ஓவியர் சுந்தரன் முருகேசன்.

இளமையோடு இருக்க காலையில் தண்ணீர் அருந்துங்கள்!

இரவில் படுக்கச் செல்வதற்குச் சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் முன்பாக உணவு உண்ணும் பழக்கம் இருந்தால் போதும்; தூங்குவதற்கு முன்பாகச் சிறிதளவு தண்ணீர் அருந்தும் பழக்கம் தானாக உருவாகும்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண்களை ஊக்குவிப்பது அவசியம்!

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் (International Day of Women and Girls in Science) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. நவீன அறிவியல் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதி முக்கியமாக உள்ளது. உலகில் அநேக நாடுகளில் கல்வி அறிவு பெருகியுள்ள இந்தக் காலகட்டத்தில் தினம் தினம் புதுக் கண்டுபிடிப்புகளுடன் முன்னேறி வரும் அறிவியலின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. எனினும் இந்த அறிவியல் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கும் முழுமையாக […]

பலவீனமாக உணர்கிறீர்களா? இதுவும் காரணமாக இருக்கலாம்!

இரும்பு, வைட்டமின் பி12 அல்லது வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ரத்த சோகை, ஆற்றல் குறைந்தல் மற்றும் தசை பலவீனம் ஏற்படலாம். உதாரணமாக, இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகை திசுக்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்கிறது. இதனால் சோர்வு மற்றும் சோம்பல் ஏற்படுகிறது. தூக்கமின்மை அல்லது அதிக உடல் உழைப்பு போன்ற தற்காலிக காரணிகளால் அவ்வப்போது சோர்வு ஏற்படலாம் என்றாலும், தொடர்ச்சியான பலவீனம் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து, ஊட்டச்சத்து குறைபாடுகள், நாள்பட்ட நோய்கள் அல்லது மனநல […]