கேள்விகேட்கும் குழந்தைதான் முதல் விஞ்ஞானி!

“உயர்ந்த எண்ணங்கள் தான் வளர்ச்சியைக் கொடுக்கும். எண்ணங்கள், சிந்தனைகளும் தான் முன்னேற்றும்” என்று, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

சில வேண்டுதல்கள் எல்லா செவிகளுக்கும் கேட்கும்!

இரு சுவையான முகநூல் பதிவுகள்: பிப்ரவரி ‘உயிர் எழுத்து’ இதழில் என்னுடைய நேர்காணல் வருகிறது. நான் கிரிக்கெட் பார்த்த காலத்தில் வாஸிம் அக்ரம் என்றொரு பௌலர் இருந்தார். அவர் பந்து வீசும்போது டென்ஷனாவேன். ஏதோ நானே களத்தில் நிற்பதுபோல. அப்படிதான் இருந்தன சுதீர் செந்திலின் கேள்விகள். சில பதில்களுக்கு கிருண்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்போல அடித்து ஆடியிருக்கிறேன். சில இடங்களில் கவாஸ்கர் போல தடுத்து ஆடியும் இருக்கிறேன். Anyway, அனைத்து கேள்விகளுக்கும் காய்தல் உவத்தில் இன்றி மனத்தூய்மையோடு பதில் அளித்திருக்கிறேன். […]

குறள் வழியே தமிழ் கற்கலாம்!

பீலி என்றால் மயிலிறகு. வால்போல் தோன்றினாலும் அது வாலன்று என்பதால் மயிலிறகுக்குப் பீலி என்ற சிறப்புப் பெயர். மயிற்பீலிக்கு எடையே இராது. அவ்வளவு மெலிது. மயில் தோகை விரித்து ஆடுவதன் உண்மைச் செயல் என்ன தெரியுமா? தோகை விரித்து நிற்கும்போது தோகைப்பரப்பில் காற்று மோதுவதால் தடுமாறும். ஒரு பக்கமாக இழுபடும். அவ்வாறு காற்றின் போக்கிற்கேற்பத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள கால் மாற்றி வைப்பதுதான் மயில் ஆடுவதுபோல் தோன்றுகிறது. பெய்தல் என்றால் சிறிய விடுபாடுகூட இல்லாமல் நிறைத்துக்கூடி விழுவது. மழை […]

திண்டுக்கல்ல பத்தி என்ன நினைச்சீங்க?

எம்.ஜி.ஆர். முதல் முதலா அதிமுகவைத் துவக்கினப்போ இங்கே ஆளை நிறுத்தி ஜெயிக்க வைக்கலாம்னு நினைச்சார். பாருங்க… ஏதோ திண்டுக்கல்லில் போய் முதல் முதல்லே நின்னம்னா ஜெயிச்சுப் புடலாம்னு… வந்த பல பேர் மண்ணைக் கவ்விட்டாங்க. அந்த அளவுக்குச் சுரணையுள்ள ஊர் இது. டிக்கெட் சேர்க்கிறதுக்கா கண்டக்டர்களும், புரோக்கர்களும் அதிக வறட்சியாயிடுச்சுன்னா டிரைவர்களும் சேர்ந்து குரல் கொடுக்கிற சத்தம், மர்ர.. மர்ர.. மார.- மர்ர.. (மதுரை), தீச்சி.. தீச்சி.. (திருச்சி) பன்னி.. பன்னி.. (பழனி)-ன்னு வேகமாகக் குரல் கொடுக்கும்போது […]

‘ஆகோள்’ மூன்றாம் பாகம் 2026-ல் வெளியாகும்!

ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன் வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளிவந்த நாவல் ‘ஆகோள்’. ஆங்கிலத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றது.

மற்றவர்களைப் பாராட்டும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்!

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்களோன்னு நினைச்சு, கவலைப்பட்டு மன அமைதியை இழந்துடக் கூடாது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதை தைரியமாக ஃபேஸ் பண்ணி ஜெயிக்கணும்.