‘நா’ இருப்போரெல்லாம் ‘நா’காக்க!
அண்மைக்கால ஊடகச் செய்திகளைப் பார்க்கும்போது, காது இருப்பவர்களுக்கெல்லாம், காது இருப்பதே பெரும் வேதனையாக இருக்கிறது. அந்த அளவுக்கு நம்மைச் சுற்றிலும் செமத்தியான பேச்சுக்கள் எங்கு பார்த்தாலும், பரவிக் கொண்டிருக்கின்றன. குளிர்காலத்தில், பலருக்கு பெட்சீட்டெல்லாம் போர்த்தாத போதே உடம்பெல்லாம் வெட வெடக்கிற மாதிரி தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பொதுவெளியில் பேசும் பலர், நாக்கில் சுளுக்கு விழும் அளவிற்கு பேசிவிட்டு அவை பொதுவெளியில், போதுமான அளவிற்கு பீதியைக் கிளப்பிய பிறகு, சாவகாசமாக பிறகு மன்னிப்பு அறிக்கையை விடுக்கிறார்கள். மூத்த அமைச்சர்கள் […]
தமிழ்ப் புத்தாண்டில் ஏம்ப்பா இப்படி புதுப்புதுப் பூச்சாண்டிகள்?
பொதுவாக புத்தாண்டு பிறக்கும் சமயங்களிலெல்லாம் ஜோதிடர்கள் சொல்லி வைத்ததைப் போல, வரும் ஆண்டுக்கான பலாபலன்களைப் பற்றி விவரித்துப் பேச, தொலைக்காட்சிகளுக்கு முன்னால், வெவ்வேறு ராசிக்காரர்கள் விரைத்துப் போய் உட்கார்ந்திருப்பார்கள். இதுபோதாதென்று அண்மையில், ராமேஸ்வரம் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி விசேஷ பஞ்சாங்கத்தை வாசித்திருக்கிறார்கள். அதில், இரண்டு வெடிகுண்டுகளைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள். ஒன்று, ஏற்கனவே தமிழ்நாட்டில் சில பல மாதங்களுக்கு முன்பு மழை பெருமளவில் பெய்து படாதபாடு படுத்தியபோதும், மத்திய அரசு கொஞ்சம் கூட நிவாரண நிதி அளிக்காமல் […]
மாநில உரிமைகளை மீட்டெடுக்கக் குழு!
“என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி டெல்லி தன்னால் ஆனதைப் பார்க்கட்டும்” – தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1968-ம் ஆண்டு இருமொழிக் கொள்கை சட்டத்தை நிறைவேற்றி, இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கிய முதலமைச்சர் அண்ணா, அதன்பின் சென்னையில் நடைபெற்ற கழகக் கூட்டத்தில் துணிச்சலோடு முழங்கினார். ஏறத்தாழ 57 ஆண்டுகள் கடந்தும் தமிழ்நாட்டில் அண்ணா நிறைவேற்றிய இருமொழிக் கொள்கை மாறவில்லை. 1969-ல் ராஜமன்னார் தலைமையிலான குழுவை அமைத்து மைய-மாநில உறவுகள் குறித்து அறிக்கையைப் பெற்ற முதலமைச்சர் கலைஞர், […]
வானகத்தில் நடைபெற்ற நம்மாழ்வார் விருதுகள் வழங்கும் விழா!
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் 87 ஆவது பிறந்தநாளையொட்டி, வானகம் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அவரது நினைவாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. நம்மாழ்வாரின் நெருங்கிய நண்பரும் 50 ஆண்டு காலம் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளவருமான, திரு. வெள்ளைச்சாமி அவர்களோடு இணைந்து நம்மாழ்வாரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைதது. அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நம்மாழ்வார் விருது, மரபு சார் கால்நடை மருத்துவ சாதனை படைத்த கால்நடை மருத்துவர் திரு. காசி […]
இனி, தமிழகப் பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர், வேந்தரல்ல!
கரைவேட்டி கட்டிக்கொண்டு அரசியல் செய்யலாம், ராஜ்பவனில் அமர்ந்துகொண்டு ஒருதரப்புக்கு சார்பாக நடந்து கொண்டால் இப்படித்தான் நடக்கும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது ஒன்றும் புதிதல்ல. நாகாலாந்தில் பணியாற்றிய காலத்திலேயே ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார் என்பது தான் அவர் மீதான விமர்சனம். தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றது முதல் அந்த பதவிக்கு நியாயம் செய்யாமல் நடப்பதாக விமர்சனத்திற்கு ஆளானார் ஆளுநர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒன்றுகூடி நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே அவரது கடமை. ஒருவேளை மாற்றுக் கருத்து இருந்தால் […]
தமிழக புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் 69 ஆனது!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வட்டாரப் பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மரச்சிற்பம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, பத்தமடை பாய் உள்ளிட்ட பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை, சம்பந்தப்பட்ட ஊரை […]