தமிழரின் கட்டுமானக் கலைக்கு உதாரணமான செட்டிநாட்டு வீடுகள்!

வீடு என்கிற வசிப்பிடங்களுக்கு நாம் தரும் மதிப்பு அவரவர் பொருளாதார ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப, அந்தந்த பகுதிக்கான சூழலுக்கு ஏற்ப மாறுபட்டிருக்கிறது. மன்னர்களும் ஜமீன்களும் பெரு அரண்மனையில் அமோகமாய் வாழ்ந்திருக்கிறார்கள். எளிய கிராமப்புற விவசாயிகள் கூரை வேய்ந்த சிறு வீடுகளில் மிக எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள். மலை வாழ் மக்களோ அவர்கள் வாழ்விடத்தை ஒட்டியபடி அவர்களும் எளிய வாழ்வையே மேற்கொண்டிருக்கிறார்கள்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை துவங்கி ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை வீடுகளுடைய பொதுவான […]

நூற்புத் தொழில்: வாழ்வாதாரத்தைக் கடந்து யோசிப்போம்!

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருப்போர் விவசாயக் கூலிகள்தான். அவர்களில் 80% மேல் உள்ளவர்கள் 70 வயதைக் கடந்து விட்டார்கள்.

சாதிப் பெயர்களை அன்றே நீக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்.!

18.09.1978 அன்று தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டபோது அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தமிழ்நாட்டின் சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும் என அறிவித்தார்.

எதார்த்த நிலையை எப்போது உணர்வார் விஜய்?

தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிப் பட்டறை கோவையில் இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு, உற்சாகப்படுத்தியுள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசிய பேச்சுகள், ‘அச்சடித்த உரை, பல தலைவர்கள்  ஏற்கனவே அரைத்த மாவு’ என்றே  விமர்சனம் செய்யப்படுகிறது.   விஜயின் கோவை விசிட், ஊடகங்களுக்கு மூன்று நாட்கள் தீனிபோட்டதோடு சுருங்கி விட்டதே தவிர, பெரிய தாக்கங்களை உருவாக்கவில்லை. சென்னையில் இருந்து விஜய், கோவைக்கு தனி விமானத்தில்தான் […]

பொதுப்புழக்கத்தில் இருந்து ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக, காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், ‘காலனி’ என்ற சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்த மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக ‘காலனி’ என்ற சொல் […]

டாஸ்மாக் விற்பனை – இப்படியொரு போட்டியா?

அண்மையில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதை உறுதிப்படுத்தியது. ஆனால், அந்த சோதனை நடந்து முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன.  ஏன் அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தில் புகுந்து இந்த சோதனையை நடத்தியது. அந்த சோதனைக்குப் பிறகு குறிப்பிட்ட சில தவறுகளையும் ஏன் கசியவிட்டது? தகுந்த ஆவணங்கள் சிக்கியிருந்தால், அதற்கேற்ற உரிய நடவடிக்கையை இதுவரை ஏன் அமலாக்கத்துறை மேற்கொள்ளவில்லை? இப்படியெல்லாம் டாஸ்மாக் மீது அடுத்தடுத்த புகார்கள் வந்தாலும், மதுபானக் கடைகளில் […]