உருவ கேலி காமெடிக்கு என்ன செய்யப் போகிறோம்?
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு என்று பல நல்ல நல்ல காட்சிகளை உதாரணத்திற்கு கருப்பு வெள்ளை காலத்தில் இருந்தே எடுத்துச் சொல்லலாம். நல்ல உதாரணங்கள் இப்போது வருகிற சினிமாக்களில் இருந்தும் காட்டலாம் என்றாலும், சம காலத்தில் காமெடி என்கிற பெயரில் நடைபெறும் உருவக்கேலிகளை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. இது தொடர்பாக நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை உதாரணமாகக் கூறலாம் இந்தப் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சி தொடர்பாக நடிகை தேவயானி […]
சமூகத்தில் அறம் வளர, அன்பு பெருக…!
இன்றைய நச் சம்பாதிக்கும் பொருள்களில் அதிகமாக மிகுதியிருந்தால், அதை முறைப்படி பிறர்க்கு உதவுவது மனிதனின் கடமை. குறைந்தபட்சம் தனது வருமானத்தில் நூறில் ஒரு பங்கு ஒதுக்கித் தன்னலமற்ற ஈகையாக்கிப் பிறர்க்கு உதவுவது சமுதாயத்தில் அறம் வளர, அன்பு ஓங்க ஏற்ற நற்செயலாகும். – தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
எண்ணங்களை உயர்த்துங்கள்; குரலை அல்ல!
தாய் சிலேட்: உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள்; குரலை அல்ல; மழைதான் பூக்களை வளர்க்கிறது; இடி அல்ல! – நாகூர் ரூமி
அடிமை வாழ்வை அறுத்தெறியுங்கள்!
மக்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தப் பற்பல அறிஞர்கள் அரிய பெரிய வேலை செய்தனர். ஆனால், அடிப்படையை ஆராயாததால் அவர்கள் யாவரும் தோற்றனர். எனவே இளந்தோழர்களே! வருங்கால உலகம் உங்களைத்தான் நம்பியிருக்கிறது. ஆகவே நீங்கள் உங்களுக்கு அளித்துக் கொள்ளும் நல்ல தீர்ப்பால் இனத்தை எதிர்காலத்திலே எழுச்சியுறச் செய்வீர்களாக! பெரியோர்களை நம்பின காலம் போய்விட்டது. புதுமை, இளைஞர்களால்தான் நிகழ வேண்டும். நிகழ முடியும். சீனாவிலே சன்யாட்சென், இளைஞர்கள் உதவியால் தான் பழைய சீனாவை மடித்துப் புதிய சீனாவை உண்டாக்கினார். ஐரோப்பாவின் நோயாளியாகக் […]
எதை வைத்துத் தீர்மானிப்பது வாழ்க்கையை?
இன்றைய நச்: ஒரு சமூகத்தின் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என்றால், அங்கே புத்தக வாசிப்பும், எழுத்தறிவும், நூலகத் துறையும் எப்படி செயல்படுகிறது என்பது ஒரு குறியீடு ஆகும்! – நோபல் அறிஞர் தோனி மாரீசன்
எடுப்பதைக் கொடுப்பதே இயல்பு!
வாசிப்பின் ருசி: கொள்ளுவன கொள்ளுக கொண்டதன்பின் கொடுப்பவர் ஆகுக; தள்ளுவன தள்ளுக தள்ளியபின் தவமொன்றியற்றுக; சொல்லுவன சொல்லுக சொல்லாலே ஒரு சுடர்தனை ஏற்றுக! – ஜெயகாந்தன்