நாட்டுப்புறக் கலைகளில் இருந்து தோன்றிய சாஸ்திரியக் கலைகள்!

பத்ம விருதாளர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய டாக்டர் பத்மா சுப்பிரமணியன், பாமரக் கலைகளில் இருந்து சாஸ்திரியக் கலைகள் தோன்றியதாகக் கூறினார்.

‘நா’ இருப்போரெல்லாம் ‘நா’காக்க!

அண்மைக்கால ஊடகச் செய்திகளைப் பார்க்கும்போது, காது இருப்பவர்களுக்கெல்லாம், காது இருப்பதே பெரும் வேதனையாக இருக்கிறது. அந்த அளவுக்கு நம்மைச் சுற்றிலும் செமத்தியான பேச்சுக்கள் எங்கு பார்த்தாலும், பரவிக் கொண்டிருக்கின்றன.  குளிர்காலத்தில், பலருக்கு பெட்சீட்டெல்லாம் போர்த்தாத போதே உடம்பெல்லாம் வெட வெடக்கிற மாதிரி தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பொதுவெளியில் பேசும் பலர், நாக்கில் சுளுக்கு விழும் அளவிற்கு பேசிவிட்டு அவை பொதுவெளியில், போதுமான அளவிற்கு பீதியைக் கிளப்பிய பிறகு, சாவகாசமாக பிறகு மன்னிப்பு அறிக்கையை விடுக்கிறார்கள்.  மூத்த அமைச்சர்கள் […]

தமிழ்ப் புத்தாண்டில் ஏம்ப்பா இப்படி புதுப்புதுப் பூச்சாண்டிகள்?

பொதுவாக புத்தாண்டு பிறக்கும் சமயங்களிலெல்லாம் ஜோதிடர்கள் சொல்லி வைத்ததைப் போல, வரும் ஆண்டுக்கான பலாபலன்களைப் பற்றி விவரித்துப் பேச, தொலைக்காட்சிகளுக்கு முன்னால், வெவ்வேறு ராசிக்காரர்கள் விரைத்துப் போய் உட்கார்ந்திருப்பார்கள். இதுபோதாதென்று அண்மையில், ராமேஸ்வரம் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி விசேஷ பஞ்சாங்கத்தை வாசித்திருக்கிறார்கள். அதில்,  இரண்டு வெடிகுண்டுகளைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள். ஒன்று, ஏற்கனவே தமிழ்நாட்டில் சில பல மாதங்களுக்கு முன்பு மழை பெருமளவில் பெய்து படாதபாடு படுத்தியபோதும், மத்திய அரசு கொஞ்சம் கூட நிவாரண நிதி அளிக்காமல் […]

மாநில உரிமைகளை மீட்டெடுக்கக் குழு!

“என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி டெல்லி தன்னால் ஆனதைப் பார்க்கட்டும்” – தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1968-ம் ஆண்டு இருமொழிக் கொள்கை சட்டத்தை நிறைவேற்றி, இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கிய முதலமைச்சர் அண்ணா, அதன்பின் சென்னையில் நடைபெற்ற கழகக் கூட்டத்தில் துணிச்சலோடு முழங்கினார். ஏறத்தாழ 57 ஆண்டுகள் கடந்தும் தமிழ்நாட்டில் அண்ணா நிறைவேற்றிய இருமொழிக் கொள்கை மாறவில்லை. 1969-ல் ராஜமன்னார் தலைமையிலான குழுவை அமைத்து மைய-மாநில உறவுகள் குறித்து அறிக்கையைப் பெற்ற முதலமைச்சர் கலைஞர், […]

பாஜகவின் சொத்துக்குக் கிடைத்த பிரமோஷன்!

செய்தி: அண்ணாமலை பாஜகவின் மிகப்பெரிய சொத்து! – நயினார் நாகேந்திரன் பேட்டி. கோவிந்த் கமெண்ட்: பாஜகவின் மிகப்பெரிய சொத்து என்று கருதியதாலா மாநிலத் தலைமையிலிருந்து தேசிய அளவுக்கு அவரை நகர்த்திப் பிரமோஷன் கொடுத்திருக்கிறீர்களா? #பாஜக #நயினார்நாகேந்திரன் #அண்ணாமலை #annamalai #nainarnagendren #bjp

‘முதல் மரியாதை’க்குக் கிடைத்த ‘முதல்’ மரியாதை!

அருமை நிழல்: கிராமத்துக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் பாரதிராஜா எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘முதல் மரியாதை’. 1985 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெளியானபோது மிகக் குறைந்த அளவிலேயே ரசிகர்கள் காண வந்த நிலையில் ஒரு சில வாரங்களிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய வெற்றியடைந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. முதல் மரியாதை படத் தயாரிப்பின்போது நடிகர் திலகத்துக்கு மாலை அணிவித்து (முதல்) மரியாதை […]