மகிழ்ச்சியாக இருக்க வழிகாட்டும் நூல்!

நூல் அறிமுகம்: உங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், உங்களுடைய மனத்தடைகளை அகற்றுவதற்கும் உதவுகின்ற, நடைமுறைக்கேற்ற, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உத்திகளை இந்நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. உங்களுடைய எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும், உங்களுடைய சுயபிம்பத்தை உயர்த்திக் கொள்ளவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இந்நூல் உங்களுக்கு வழிகாட்டும். இந்நூலில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்; உங்களுடைய உள்ளார்ந்த குரலைச் செவிமடுப்பதற்கான சரியான வழிமுறையைக் கண்டறிவது எப்படி? அமைதியான மனநிலையை நிலைநிறுத்திக் கொள்வதற்கு மனத்தளவில் விலகி இருத்தல் எப்படி உதவும்? எது நடந்தாலும், அதனால் என்ன? […]

மக்களுக்குத் தேவை நல்லாட்சி!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15  ****** “அரசுமுறை செய்க களவில் லாகுக”         – ஐங்குறுநூறு, பாடல் 8, அடி 2 புலவர்: ஓரம்போகியார் திணை: மருதம் சொற் பிரிப்பு : களவு இல்லாகுக நாட்டில் அரசு முறையாக இயங்க வேண்டும். வஞ்சகம் இல்லாதிருத்தல் வேண்டும் என்கிறார் புலவர் ஓரம்போகியார். அரசு முறையாக இயங்காவிடில் நாட்டில் பல தீவினைகள் நிகழும். மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்குகள் நேரும். இவையெல்லாம் இருப்பதற்காக அரசு […]

அவரவர் இயல்போடு ஏற்றுக் கொள்வோம்!

வாசிப்பின் ருசி : மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உன்னதங்கள்தான்; சில சமயங்களில் அவனை ஏதோ ஒன்று நிலைதடுமாற வைக்கிறது அவ்வளவுதான்! – வண்ணநிலவன்

நடந்து தேய்ந்த கால்கள்; எழுதி ஓய்ந்த கைகள்!

‘அறம்’ என்ற பெயருக்கு முற்றிலும் பொருத்தமான தோழர் அவர். அவரது கால்கள் நடந்தே தேய்ந்தவை. அவரது கைகள் எழுதியே தேய்ந்தவை. ஆனால், அவரிடம் பொங்கி வழிந்த அன்பு மட்டும் ஒருபோதும் தேய்ந்ததே இல்லை.

சுந்தர ராமசாமி: நவீனத்துவக் கனவின் வடிவம்!

சுந்தர ராமசாமி 1977-78 வாக்கில் எழுதத் தொடங்கியிருந்த ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவல், பாலுவின் உலகம் என்ற நாவலிலிருந்து கிளைத்துத் தனிப்படைப்பாக உருவானது. பாலுவின் உலகம் நாவல் பற்றி ஒருமுறை, “இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்நாவலின் முதல் பகுதி பாலுவின் வாழ்வனுபவங்களின் பதிவாகவும், இரண்டாம் பகுதி அந்த அனுபவங்களின் பரிசீலனைகளாக டயரி வடிவிலும் அமையும்” என்றார். பின்னர், ஜே.ஜே. எழுதத் தொடங்கியபோது, “பாலுவின் உலகம் எழுதிக்கொண்டிருந்தபோது சம்பத் என்ற பாத்திரம் உள்ளே வந்தது. தொடர்ந்து சம்பத்தின் நண்பனாக […]

சினிமாவை விரும்பாத பெரியார் சீனிவாசனுக்காகப் பார்த்த படம்!

அருமை நிழல்: தந்தை பெரியார் திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புவதில்லை என்றாலும் முக்தா சீனிவாசன் தயாரித்து இயக்கிய ‘சூரியகாந்தி’ எனும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை, முக்தா சீனிவாசனின் அன்பு வேண்டுகோளை ஏற்று, படத்தை முழுமையாகப் பார்த்தார். இது ஜெயலலிதா நடித்த 100-வது படம். படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டபோது பெரியாருடன் முக்தா சீனிவாசன், ஜெயலலிதா, முத்துராமன் மற்றும் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படம். – நன்றி: முகநூல் பதிவு