எம்புரான் – உலகின் பல இடங்களுக்குப் பயணிக்கும் கதை!

ஒரு நட்சத்திர நடிகர் திரைப்படம் இயக்க முடிவெடுத்தால், அதில் தானே நாயகனாக நடிக்க எண்ணுவது இயல்பு. அவ்வாறில்லாமல் இன்னொரு நட்சத்திர நடிகரை அதில் நாயகனாக்குவது அரிது. மேற்கத்திய நாடுகளில் அந்த வழக்கம் பரவலாக உள்ளது. அந்த வரிசையில் இடம்பெறும் வகையில், மோகன்லாலை நாயகனாகக் கொண்டு ‘லூசிஃபர்’ தந்தார் மலையாள நடிகர் பிருத்விராஜ். தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘எல்2: எம்புரான்’ படத்தை இயக்கியிருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் ஒரே […]

கோர்ட் – போக்சோ வழக்கில் சிக்கும் அப்பாவியின் கதை!

எண்பதுகளில் நீதிமன்ற விசாரணை இடம்பெறாத திரைப்படங்களே இல்லை எனும் நிலை இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழித் திரைப்படங்களிலும் அது ஒரு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டது. கௌரவம் தொடங்கி விதி, பாசப்பறவைகள், கனம் கோட்டார் அவர்களே என்று பெரும்பட்டியலே இடும் அளவுக்குத் தமிழில் நீதிமன்றத்தைக் காட்டிய திரைப்படங்கள் பல. ஆனால், பின்னர் வந்த விருமாண்டி, பருத்தி வீரன், வழக்கு எண் 18/9 போன்ற படங்களில் இடம்பெற்ற நீதிமன்றங்களும் சரி, அங்கு நடைபெறுவதாகக் காட்டப்பட்ட விசாரணையும் […]

ட்ராமா – குழந்தைப்பேறின்மை பிரச்சனையின் இன்னொரு முகம்!

மருத்துவ உலகம் குறித்த திரைப்படங்கள் பார்வையாளர்களின் கவனத்தைக் குவிப்பதில் தடுமாற்றங்களை எதிர்கொள்ளும். அப்படங்கள் பேசும் பிரச்சனைகள் சமகாலத்தைப் பிரதிபலிக்கும்பட்சத்தில், அவற்றின் உள்ளடக்கம் எளிமையாக இருக்கிறபோது, அவை பெரும் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில் ‘செயற்கை கருத்தரிப்பு’ நுட்பத்தைப் பற்றிப் பேசும் வகையில் குற்றம் 23, காதலிக்க நேரமில்லை, மிரியம் மா, யசோதா உள்ளிட்ட சில திரைப்படங்கள் இதுவரை வந்திருக்கின்றன. அவை வெவ்வேறு வகைமையில் அமைந்திருந்தன. அவற்றில் ஒன்றாக அமைந்திருக்கிறது தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ள ‘ட்ராமா’ (Trauma). ஆங்கிலத்தில் […]

‘சுழல் 2’ – பெண் சக்தி ஒன்றிணைந்தால்…!

‘பெண் சக்தி ஒன்றிணைந்தால் என்ன நடக்கும் தெரியுமா’ என்று சொல்லப்பட்டிருக்கிற ‘சுழல் 2’ சுவாரஸ்யமான காட்சியனுபவத்தைத் தருகிறது.

நிறம் மாறும் உலகில் – மீண்டும் ‘தாய்பாசம்’!

’இந்தக் காலத்துல அம்மா சென்டிமெண்ட் படம்லாம் எடுபடுமா சார்’. இதுபோன்ற பேச்சுகளைச் சமீப ஆண்டுகளில் நிறையவே திரையுலகில் சிலர் கேட்டிருப்பார்கள். கேஜிஎஃப் போன்ற ஆக்‌ஷன் படங்களின் வெற்றியில் தாய்பாசத்திற்கும் இடமுண்டு என்ற உணர்ந்தபிறகே அந்த பேச்சுகள் குறைந்திருக்கின்றன. போலவே, ‘உலக சினிமா’ என்று நாம் இன்று பார்த்து ரசிக்கிற பல படங்களையொத்த காட்சிமொழியோடு தமிழில் படம் எடுத்தால் ரசிகர்கள் ஆதரிப்பார்களா? அதிலும் ‘ஆந்தாலஜி’ வகையறா கதைகள் எடுபடுமா? மேற்சொன்ன விஷயங்கள் அனைத்துக்கும் விடையளிப்பது போல வெளியாகியிருக்கிறது புதுமுகம் […]

பெருசு – ‘மூர்த்தி சிறுசுதான்’ ரக கதை!

தமிழில் ‘அடல்ட் கன்டெண்ட்’ படங்களுக்கான வரவேற்பு என்பது குதிரைக்கொம்பை தேடுவதாகவே அமைந்திருக்கிறது. எண்பதுகளில் மலையாளத் திரையுலகில் அப்படியான முயற்சிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து தமிழிலும் சில இயக்குனர்கள் அதனைப் பரீட்சித்துப் பார்த்தார்கள். அவற்றில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதனைத் தனது படங்களில் ஒரு அம்சமாக எடுத்துக்கொண்டு வெற்றிகள் பலவற்றைப் பெற்றவர் இயக்குனர் கே.பாக்யராஜ். அதன்பின் எஸ்.ஜே.சூர்யா அதனைக் கொஞ்சம் லாவகமாகக் கையாண்டார். ஆனால், அவர் நாயகனாக நடித்த படங்கள் ஆபாச எல்லையையும் தாண்டி […]