மிட்டாய்ப் பருவம்!

“நாம இந்த மாறுற உடம்பு அமைப்பையும் புதுசா வந்த பீரியட்சையும் ஏத்துக்கவே எவ்ளோ காலம் கஷ்டப் படுறோம். அதுல இவங்க பண்ற கடுப்ப வேற சமாளிக்கனும்.. ஸ்ஸப்பா..”

30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாத ஆயுள் சிறை!

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்படி அடுத்த நாளே ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு 29 சாட்சியங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்டு குற்றப் […]

ஒடித்துப்போடப்பட்ட மனிதர்களை எழுதுவதே புதுக்கவிதை!

தமிழ் மண்ணிலே ஆயிரம் கவிஞர்கள் வந்து போகலாம்; ஆனாலும் ஆலமரமாய்த் தனித்து நிற்பவர்கள் ஒருசிலரே. அதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். ‘மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்’ என்று பாராட்டப் பெறும் சிறப்புக்குரியவர் கவிக்கோ, ‘வானம்பாடி’ இயக்கத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக மலர்ந்தார். கீட்ஸ், ஷெல்லி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதைகளால் மனம் கவரப்பட்ட அப்துல் ரகுமான், மவுலானா ஜலாலுத்தீன் ரூமி, இக்பால், தாகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோரது கவிதைகளையும் […]

பெற்றோரே அன்பின் எல்லை!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதி உலகப் பெற்றோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது வெறும் ஒரு குறிப்பிட்ட நாளில் பெற்றோர்களை நினைவுகூரும் நிகழ்வு மட்டுமல்ல, நம் வாழ்வின் அடித்தளமாய் நின்று, தன்னலமற்ற அன்பையும், தியாகத்தையும் பொழிந்து, நம் ஒவ்வொரு அசைவிலும் துணையாய் நிற்கும் அந்த மகத்தான சக்திக்கு நாம் செலுத்தும் நன்றியாகும். குடும்பம் என்ற சமூக அமைப்பின் இதயமாகத் திகழும் பெற்றோரின் அர்ப்பணிப்பை உலக அளவில் அங்கீகரித்து, அவர்களைப் போற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை […]

“நான் கருணாநிதி பேசுகிறேன்”!

* காலை மணி ஐந்தரை வாக்கில் வீட்டுத் தொலைபேசி மணி அடித்து எடுத்தபோது எதிர்முனையில் கலைஞர். வியப்பாக இருந்தது. அன்று காலை நான் பணியாற்றி வந்த பிரபல வார இதழில் அவருடைய பேட்டி வெளியாகி இருந்தது. “பேட்டி எடுத்ததைச் சிதைக்காமல் வெளியிட்டிருக்கீங்க. பெர்பெக்ட்டா இருக்கு… நல்லது… சந்திப்போம். இனி தயங்காம வாங்க” – சுருக்கமாகத் தந்தி அடிக்கிற மாதிரி ரத்தினச் சுருக்கமாகப் பேசி விட்டு வைத்துவிட்டார். அப்போது ‘முரசொலி’யில் பணியாற்றிக் கொண்டிருந்த மூத்த நண்பர் சின்னக்குத்தூசி தான் […]

குறவர் இனக்குழுக்கள் குறித்த சிறுகதைகள்!

நூல் அறிமுகம்: கதைகள் ஏன் எழுதப்படுகின்றன? அவை எழுத்தாளர்களின் சித்தரிப்புக் கலையை உணர்ந்து கொள்ளவா? அல்லது கதைகள் நமக்குத் தெரியும் என்பதற்காகப் பிறரிடம் சொல்லவா? என்ற கருத்து எப்போதும் எனக்குத் தோன்றுவதுண்டு. சொல்லப்பட்ட கதைகளைவிட சொல்லப்படாத அச்சிலேறாத கதைகள் இவ்வுலகில் நிரம்ப உண்டு. அவற்றில் மானுட நடத்தையும் துயரமும், மகிழ்ச்சியும் வரலாறும் வாழ்க்கைப் பதிவுகளாக பதியப்படாமல் போனதுண்டு. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மையமாகக் கொண்டு ஒரு சமூகத்தின் அவலங்களையும் துயரங்களையும் அச்சமூகம் எதிர்கொண்ட சமூக முரணையும் காட்சியாகப் […]