செய்தி:
மேற்காசியப் போரை அரசியலாக்கக் கூடாது; 140 கோடி மக்களும் இணைந்து சவாலான சூழ்நிலையை முறியடிக்க வேண்டும்!
- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசி வருவதை இதுவரை விமர்சித்து வந்தவர்கள் கூட, தற்போதைய போர் குறித்து பிரதமர் பேசியிருக்கிற இந்த வேண்டுகோளை ஏற்பார்கள் என்று நம்பலாம்.
போரை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற குரல், அமெரிக்காவிற்கு உள்ளேயே இருந்து எழ ஆரம்பித்திருக்கிற நிலையில், அதை தான் பிரதமர் மோடியும் பிரதிபலித்திருக்கிறார்.