ட்ரம்பின் லேட்டஸ்ட் துதி!
செய்தி: பிரதமர் நரேந்திர மோடி நெஞ்சுரம் கொண்டவர்! – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம். கோவிந்த் கமெண்ட்: டிரம்ப் இதற்கு முன்பு இந்தியா உள்ளிட்ட பலநாட்டு தலைவர்கள் மீது வசைப்படியிருக்கிறார். எப்போதாவது புகழவும் செய்திருக்கிறார். தற்போது பிரதமர் மோடியை ஆதரித்து புகழ் பாடியிருக்கிறார். ட்ரம்ப்-ஆல் புகழப்படும் போதுதான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
முடிவுக்கு வந்திருக்கிறதா போர்?
செய்தி: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! – 111 நாட்கள் நீடித்த பதற்றம் முழுமையாக தணிந்தது. கோவிந்த் கமெண்ட்: நவம்பரில் அமெரிக்காவில் தேர்தல் வரப்போவதன் முன் அறிகுறியாக ஈரானுடனான சமதான ஒப்பந்தத்திற்கு முன் வந்திருக்கிறார் அமெரிக்க அதிபரான டிரம்ப். ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் இன்னும் இஸ்ரேல் மட்டும் முரண்டுபிடித்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தற்போது எரிபொருளுக்கான கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் இறங்கி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் எரிபொருளின் […]
டிரம்பின் வரவேற்கத்தக்க அறிவிப்பு!
செய்தி: ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு அனுப்புவேன். – ஜி-7 மாநாட்டுக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு! கோவிந்த் கமெண்ட்: சில மாதங்களுக்கு மேல் தொடர்ந்து நடந்துவந்த மேற்காசியப் போர் ஒரு வழியாக முடிவடைய இருக்கிறது. அமெரிக்காவும் ஈரானும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் மட்டும் இந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளாமல் தன்னுடைய நிலைப்பாட்டோடு, தனித்திருக்கிறது. அதேசமயம், டிரம்ப் இந்த சமாதான ஒப்பந்தத்திற்கு வருவதற்கான அசலான காரணம், […]
முடிவுக்கு வரும் மேற்காசியப் போர்!
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய இப்போரில் முக்கிய அரசியல் தலைவர்கள், இரு தரப்பு வீரர்கள், அப்பாவிப் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அமெரிக்காவுடனான மோதலைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதேவேளை, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டது. இதனால் ஈரானுக்கு சரக்கு […]
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் மோடி!
ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின்போது 52-வது ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின்போது நாளை (14-ம் தேதி) பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதன் மூலம் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
அமைதி பற்றிப் பேசும் டிரம்ப்!
செய்தி: அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தவிர ஈரானுக்கு வேறு வழியே கிடையாது! – அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து. கோவிந்த் கமெண்ட்: அமைதிக்கான ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அமெரிக்க அதிபரான டிரம்ப் முதலில் அமைதி நிலவுவதற்கான போர்ச்சூழலற்ற நிலையை உருவாக்கியிருக்கிறாரா என்பதைத் தெளிவுப்படுத்தட்டும்.