இசை, நாட்டியம், ஓவியம்

இலக்கியத்துக்கு ஓவியம் எந்தளவுக்கு முக்கியம்?

ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் டிராட்ஸ்கி மருது. 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இந்திய அளவில் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். உலக அளவில் ‘Best Collections’ பலவற்றில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய அளவில் கணிப்பொறியை பயன்படுத்தும் ஓவியர்களுக்கு இவர்தான் முன்னோடி. கடந்த 15 வருடங்களாக சினிமாத் துறையில் கலை இயக்குநராகவும், அனிமேக்கராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ் வணிகப் பத்திரிகைகளிலும், சிறுபத்திரிகைகளிலும் தொடர்ந்து வரைந்து வருகிறார். கீற்று […]

கலவரச் சூழலுக்கு இடையே கச்சேரி நடத்தினோம்!

‘நாட்டுப்புறப் பாடல் பாடுபவர்’ என்பது மட்டுமின்றி, விஜயலட்சுமிக்கு வேறு பல முகங்களும் இருக்கின்றன. கணவரைப் போலவே, இவரும் பல்கலைக்கழகப் பேராசிரியை. சிறந்த பேச்சாளர். ஒருமுறை, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவில், ‘சங்க இலக்கியமும் நாட்டுப்புறப் பாடல்களும்’ என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருக்கையில்… விழாவுக்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் மேடையேறியதும் உடனடியாகச் சுருக்கமாகப் பேசி முடிக்குமாறு வற்புறுத்தப்பட்டிருக்கிறார். ஆனால், இவரது பேச்சிலும் நாட்டுப்புறப்பாட்டிலும் லயித்துப்போன எம்.ஜி.ஆர், இவரைத் தொடர்ந்து பேசச்சொல்ல… விடாமல் இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறார் […]

அருகிவரும் அசலான அன்பு!

இன்றைய நச் :  உண்மையிலேயே அசலான அன்பை காட்டுகிறவர்கள், அடுத்துவரும் தலைமுறையின் நினைவில்கூட தங்காமல் காணாமல் போனவர்களின் பட்டியலுக்குச் சென்றுவிடுவார்கள்.

வாழ்வைப் புரிந்துகொள்ள அதனுள் பயணிக்க வேண்டும்!

கலைப்படைப்புகளில் ஒளிவீசும் அழகியல் அம்சங்களைக் காட்டிலும், அவற்றில் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை, பண்பாட்டுக் கூறுகளே பார்வையாளர் உடனான பிணைப்பை இறுக்கமாக்கும். அவற்றில் வெளிப்படுகிற, உணர்கிற காலவெளியில் நாமே நுழைந்த உணர்வைப் பூரணமாக்கும். அந்த வகையில் கடலையும் கடல் சார்ந்த வாழ்க்கையையும் சொல்லும்விதமாக இருந்தது ‘கொண்டல் – நெய்தல் நிலைக் கலைகள்’ எனும் ஓவியம், ஒளிப்படக் காட்சி. சென்னை லலித் கலா அகாடமியில் ஜூன் 9 முதல் 16 வரை நடைபெற்றது. கடற்புற வாழ்க்கையைச் சொல்வதாக இக்கண்காட்சி அமைந்தபோதும் […]

டாவின்சியின் அபூர்வ சித்திரம்!

வேளாங்கண்ணி மாதா கோயிலில் இருந்து நான் பார்த்த எல்லா மாதா கோயில்களிலும் இருக்கும் குழந்தை இயேசு இப்படி ஒரு பூனையோடு விளையாடும் விதமாக சித்தரிக்கப்பட்டது கிடையாது.

நரசிம்மரின் அபூர்வ சிற்பம்!

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலின் சிற்ப சாதனை இது. நரசிம்மர் எப்போதும் இரண்யனைத் தனது மடியில் போட்டு அவனது வயிற்றைத் தன் நகத்தால் கிழிப்பது போல்தான் எல்லா சிற்பங்களும் இருக்கும்.