கதம்பம்

செய்திக்கிடையில் விளம்பரங்களா; விளம்பரங்களுக்கு இடையில் செய்தியா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: அண்மையில் தமிழக அரசியல் பற்றிய சூடு பறக்கும் விவாதங்களும் இடைவிடாத “பிரேக்கிங் நியூஸ்களும்” வெளிவந்து கொண்டிருந்தபோது, தெரிந்த நண்பர்களின் வீட்டிற்குப் போயிருந்தேன். ஹாலில் நண்பரின் தந்தை அமர்ந்து தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் கூடுதலான ஒலி அளவு வைத்திருந்தார். சட்டென்று செய்திகளுக்கிடையில், அதிக சத்தத்துடன் விளம்பரங்கள் வெளிவந்தன. அந்த விளம்பர இரைச்சலைக் கேட்டதும், தன் கையிலிருந்த ரிமோட்டை வைத்து, அடுத்த சேனலுக்கு மாற்றினார். அவருடைய நேரம் அதிலும் அதிக இரைச்சலான விளம்பரங்களே […]

தொடர்ந்து உயரும் எரிபொருள் விலை: மக்கள் அவதி!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஐந்தாவது முறையாக விலையை உயர்த்தியுள்ளன.

விஜய் மவுனம் கலைத்தால்தான் உண்மை தெரியவரும்!

சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை விஜய் சந்திக்க வேண்டாம் என அவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

பொதுவுடைமைக் கட்சிகளின் நம்பிக்கை!

செய்தி: தமிழக வெற்றிக் கழக அரசு நீடிக்க இடதுசாரி கட்சிகள், விசிக ஆதரவே போதுமானது! – இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் நம்பிக்கை. கோவிந்த் கமெண்ட்: “நாங்கள் அணி மாறிவிட மாட்டோம். நாங்கள் உங்களோடுதான் இருப்போம். அதற்காக அதிமுகவிலிருந்து எந்த எம்.எல்.ஏக்களையும் தவெகவிற்கு கஷ்டப்பட்டு வரவழைக்காதீர்கள்” என்பதைத்தான் தங்கள் பாணியில் சொல்லியிருக்கிறார் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்.

காலத்திற்கேற்ற உத்தரவு!

செய்தி: தமிழகம் முழுவதும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க நடவடிக்கை! – பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு. கோவிந்த் கமெண்ட்: கோடை விடுமுறை முடிந்து தமிழகமெங்கும் கல்விக் கூடங்கள் திறக்கிற நேரத்தில் இப்படிப்பட்ட உத்தரவு பிறக்கப்பட்டிருப்பதை வரவேற்கலாம். ஆனால், எவ்வளவு தூரத்திற்கு தனியார் பள்ளிகள் பெற்றோரைப் பிழிந்தெடுத்து, வசூலிக்கிற கட்டணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச முன்வருவார்கள். இதற்கு கல்விக் கூடங்களைக் கேட்பதைவிட பள்ளிக் கூடங்களுக்கு தங்கள் பிள்ளைகளை […]

முன்னாள் கிரிக்கெட் வீரரின் இந்நாள் விருப்பம்! 

  செய்தி: செல்போனை ஒதுக்கிவிட்டு புத்தகங்களை வாசிக்க வேண்டும்! – இளைஞர்களுக்கு கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: புத்தக வாசிப்பு முன்பிருந்ததைவிட குறைந்துகொண்டே வந்து செல்போன் மூலமாக வலைதளப் பதிவுகளைப் பார்ப்பதும், மிகக் குறுகிய செய்திகளை வாசிப்பதும் அதிகரித்திருக்கிற நிலையில், தன்னுடைய ஆதங்கத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில்தேவ் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவுதான்.