கதம்பம்

கடமையைப் பற்றிய கனவு வாழ்வை அழகாக்கும்!

அழகைப்பற்றி கனவு காணாதீர்கள்; அது உங்களின் கடமையைப் பாழாக்கிவிடும்; கடமையைப் பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்! – ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

வானம் தான் வாழ்விடம்!

கூடு என்பது பறவைக்கான தங்குமிடம்; வானம் தான் வாழ்விடம்! – சு.வெங்கடேசன்

நல்ல வழிகாட்டி எளிதில் வெற்றி அடைவான்!

மற்றவர்களின் வெற்றிக்கு உதவினால், நாமும் சிறப்பாகவும் விரைவாகவும் வெற்றிபெற முடியும் என்பது முற்றிலும் உண்மை! – நெப்போலியன் ஹில்

மனிதனாக வாழ்வதே நிறைவாழ்வு!

எது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் மற்றவர்களின் போதனைகளோ அல்லது மற்றவர்கள் செய்தப் பெரும் செயல்களோ அல்லது தவிர்த்த இழிச் செயல்களோ அல்ல; மாறாக என்னால் ஒரு மனிதனாக ஒரு மாறுபட்ட விதமான வாழ்க்கை ஒரு உன்னதமான வாழ்க்கை வாழமுடியுமா என்பதே ஆகும்
அவ்வளவுதான் அதுதான் மிகவும் அவசியமான விஷயமாகும்!

வெற்றிக்குத் தேவை உறுதியான நம்பிக்கை!

தோல்விகளில் இருந்து வெற்றியை வளர்த்துக் கொள்ளுங்கள்; ஊக்கமின்மையும் தோல்வியும்
வெற்றிக்கான இரண்டு உறுதியான படிக்கட்டுகள்!

உன்னால் முடியாததை பிறரிடம் எதிர்பார்க்காதே!

உன்னால் செய்ய முடியாததை கடைபிடிக்க முடியாததை மற்றவரிடம் எதிர்பார்க்காதே!