சொற்பொழிவுகள், வீடியோ

காங்கிரஸ் மீது ஜோதிமணி தொடர்ந்து குற்றச்சாட்டு!

செய்தி: சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு! – ஜோதிமணி எம்.பி. பகிரங்க குற்றச்சாட்டு. கோவிந்த் கமெண்ட்: கரூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யான ஜோதிமணி இப்போது மட்டுமல்ல, தேர்தல் நடப்பதற்கு முன்பே காங்கிரஸ் தலைமை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே இதே குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை தேர்தல் முடிந்ததும் தன்னுடைய கட்சித் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக வெளிப்படையாகவே சொன்னார். அப்போது செல்வப் பெருந்தகை சொன்ன […]

தவெகவில் மட்டுமா குதிரை பேரம் நடக்கிறது?

செய்தி: தவெகவின் குதிரை பேரம் தொடர்ந்தால் சிபிஐ விசாரணை நடத்தக் கேட்போம்! – அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேட்டி. கோவிந்த் கமெண்ட்: அதிமுகவின் எடப்பாடி அணியில் இருந்தவரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி இத்தகைய கருத்தை சொல்லியிருக்கிறார். ஆனால், தற்போது அதிமுகவில் இருந்து மட்டுமல்ல, திமுகவில் இருந்தும் மேல்மட்ட நிர்வாகிகள் தவெகவுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில், இம்மாதிரியான நிகழ்வுகள் நடப்பதற்கு காரணம் என்ன பேரம் என்பதெல்லாம் தற்போதுள்ள நிலையில் சொல்லிவிட முடியாது. ஆனால், அதேசமயம் மிக அண்மையில் […]

எவ்வளவு கனத்தைத் தான் தாங்குவது?

செய்தி: டீசல் விலை ஏற்றத்தால் வாகன வாடகை அதிகரிப்பு; காய்கறி, மளிகை, எண்ணெய்ப் பொருட்கள் விலை உயர்வு! – பொதுமக்கள் அதிர்ச்சி கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்தே அமெரிக்கா அதிபரான ட்ரம்பும் சண்டை போடுகிறார். பதிலுக்கு ஈரானும் தன்னுடைய எதிர்வினையைக் காட்டுகிறது. இந்த சண்டையால் உலகளவில் பல்வேறு நாடுகளிலுள்ள மக்கள் பாதிப்புக்குள்ளாக வேண்டியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் அண்மைக் காலமாக அடுத்தடுத்து பெட்ரோல், டீசல் எரிவாயுவின் விலை ஏற்றம் தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த விலை ஏற்றத்தால் […]

மேகத்தாட்டு அணை பிரச்சனை எப்போதுதான் தீரும்?

செய்தி: மேகத்தாட்டு அணை கட்டும் விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்! – தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: மேகத்தாட்டு அணை பிரச்சனை அடிக்கடி கர்நாடகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் கட்சிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டு, அது உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கும் போயிருக்கிறது. சில வழிகாட்டு முறைகளும் தரப்பட்டிருக்கிறது. இருந்தும் கர்நாடகாவில் நிகழும் உள்ளூர் அரசியல் காரணமாக மீண்டும் இந்த மேகத்தாட்டு பிரச்சனை தற்போது கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றிருக்கிற டிகே.சிவக்குமாரால் எழுப்பப்பட்டிருக்கிறது.  […]

திருச்செந்தூர் முருகனுக்கே இப்படியா?

செய்தி: திருச்செந்தூரில் ரகசிய ஆய்வுக்கு வந்த நிலையில், சுவாமி தரிசனத்துக்காக அமைச்சரிடமே ரூபாய் 4000 லஞ்சம்! – ஜிபே மூலம் பணம் பெற்ற கோயில் அர்ச்சகர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்: 2 பேர் பணி நீக்கம் கோவிந்த் கமெண்ட்: திருச்செந்தூர் கோவில் கருவறையில் உள்ள முருகப்பெருமானை தரிசிப்பதற்கே சிறப்புக் கட்டணமாக கூடுதலான தொகை வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகள் இருந்தும் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, […]

தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மேகதாட்டு; தீர்வு என்ன?

தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் புறக்கணித்து, நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் தொடர்ந்து செயல்படுகிறது கர்நாடகா.